sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கு.பாறையூரில் குப்பை கொட்டக்கோரி தர்ணா

/

கு.பாறையூரில் குப்பை கொட்டக்கோரி தர்ணா

கு.பாறையூரில் குப்பை கொட்டக்கோரி தர்ணா

கு.பாறையூரில் குப்பை கொட்டக்கோரி தர்ணா


ADDED : ஜன 30, 2025 01:10 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கு.பாறையூரில் குப்பை கொட்டக்கோரி தர்ணா

இடைப்பாடி:இடைப்பாடி அருகே அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பையை, குறுக்குப்பாறையூரில் கொட்ட, 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். அங்கு குப்பை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என கூறி, 10 நாளாக குப்பை கொட்ட விடாமல், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 10 நாளாக டவுன் பஞ்சாயத்தில் குப்பை சேகரிக்கப்படாமல் ஆங்காங்கே தேங்கி உள்ளது.

இந்நிலையில் டவுன் பஞ்சாயத்து கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் காவேரி தலைமையில், 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு பின், தி.மு.க.,வை சேர்ந்த முருகேசன், ரமேஷ், ஆனந்தன், வசந்தா, நதியா, உமா, ராணி, அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜா, செல்வி, பா.ம.க.,வை சேர்ந்த மாரியப்பன் என, 10 கவுன்சிலர்கள், அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தலைவர் காவேரி பேச்சு நடத்தினார்.

அப்போது கவுன்சிலர்கள், 'குப்பையை அகற்றி, குறுக்குப்பாறையூரில் கொட்ட வேண்டும்' எனக்கூறினர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, காவேரி கூறியதால், கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us