ADDED : பிப் 15, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளி மர்மச்சாவு
சேலம்:சேலம், இரும்பாலை அருகே வட்டமுத்தாம்பட்டி, கற்பக விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவராமன், 50. தளவாய்பட்டியில் சேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்தார்.
அங்குள்ள குழியில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதில் மிதந்தபடி நேற்று இறந்து கிடந்தார். மக்கள் தகவல்படி, இரும்பாலை போலீசார் உடலை கைப்பற்றி, எப்படி இறந்தார் என விசாரிக்கின்றனர்.

