ADDED : பிப் 15, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்
சேலம்:சேலம் கிழக்கு கோட்ட தலைமை தபால் நிலையம் முன், கூட்டு போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தேசிய அஞ்சல் ஊழியர் சங்க, சேலம் கோட்ட செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். அதில் அஞ்சல் துறையில் இருந்து தபால் பட்டுவாடா பிரிவை, தனியே கொண்டு செல்வதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தேசிய அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள் துரைமுருகன், ஜெயபிரகாசம், விஸ்வநாதன், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க செயலர் செல்வம், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.