ADDED : பிப் 18, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டூவீலர் திருடியசேலம் வாலிபர் கைது
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டியை சேர்ந்தவர் ராமராஜ், 35; கூலித்தொழிலாளி. இவர், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் திடீரென திருடு போனது. இதுகுறித்து புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே, டூவீலரில் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, முத்துக்காப்பட்டியில் திருட்டு போன டூவீலர் என தெரியவந்தது. இதையடுத்து, டூவீலரை பறிமுதல் செய்த போலீசார், சேலம் குகை பகுதியை சேர்ந்த சிவா, 23, என்ற வாலிபரை கைது செய்தனர்.