/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருமணமான பெண்ணுக்குதொந்தரவு கொடுத்தவர் கைது
/
திருமணமான பெண்ணுக்குதொந்தரவு கொடுத்தவர் கைது
ADDED : மார் 09, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமணமான பெண்ணுக்குதொந்தரவு கொடுத்தவர் கைது
கெங்கவல்லி:கெங்கவல்லி, கடம்பூரை சேர்ந்தவர் வீரம்மாள், 48. இவர், கெங்கவல்லி போலீசில் நேற்று அளித்த புகாரில், 'கடம்பூர், க.ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன், 29, என், 30 வயதுடைய, திருமணமான மகளின் வீட்டுக்கு அடிக்கடி மதுபோதையில் சென்று தகராறு செய்கிறார். தகாத வார்த்தையில் பேசுவதோடு, பாலியல் ரீதியான தொந்தரவு தருகிறார்' என கூறியிருந்தார். விசாரித்த போலீசார், தகாத வார்த்தையில் திட்டுதல், பெண் வன்கொடுமை உள்பட, 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, நேற்று அவரை கைது செய்தனர்.