ADDED : மார் 14, 2025 01:51 AM
அ நிறம் | அளவு
நீர்வீழ்ச்சியில் குளிக்கவனத்துறை அனுமதி
ஆத்துார்:ஆத்துார் அருகே கல்வராயன்மலை, முட்டலில் உள்ள ஆணைவாரி நீர் வீழ்ச்சியில், நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் சுற்றுலா பயணியர் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்தனர். நேற்று காலை முதல், ஆணைவாரியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணியர் குளிக்கவும், நீர் வீழ்ச்சிக்கு செல்லவும், ஆத்துார் வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
