ADDED : மார் 19, 2025 01:30 AM
அ நிறம் | அளவு
பள்ளி அருகே நின்றுகஞ்சா விற்றவர் கைது
சேலம்:சேலம், கொண்டலாம்பட்டி போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். ஜாரி கொண்டலாம்பட்டி அரசு பள்ளி அருகே, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவரிடம் போலீசார் விசாரித்தபோது, நெய்க்காரப்பட்டி, மேட்டுத்தெருவை சேர்ந்த தியாகராஜன், 25, என தெரிந்தது.
அவரை சோதனை செய்ததில், 1,000 ரூபாய் மதிப்பில், சிறு பொட்டலத்தில், 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
