தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கூட்டத்தில் எஸ்.எஸ்.ஐ.,யை கீழே தள்ளிவிட்டவர் கைது

கூட்டத்தில் எஸ்.எஸ்.ஐ.,யை கீழே தள்ளிவிட்டவர் கைது

கூட்டத்தில் எஸ்.எஸ்.ஐ.,யை கீழே தள்ளிவிட்டவர் கைது


ADDED : மார் 26, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூட்டத்தில் எஸ்.எஸ்.ஐ.,யை

கீழே தள்ளிவிட்டவர் கைது

தலைவாசல்:

கோவில் விழா கூட்டத்தில், எஸ்.எஸ்.ஐ.,யை கீழே தள்ளிவிட்ட தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.

தலைவாசல் அருகே, தேவியாக்குறிச்சி கிராமத்தில், கோவில் திருவிழா தொடர்பாக நேற்று முன்தினம், ஊர் மக்களுடன் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தலைவாசல் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன், 50, அங்கிருந்தவர்களை கலைந்து செல்லும்படி கூறியுள்ளார். அப்போது, தேவியாக்குறிச்சி, இந்திரா நகரை சேர்ந்த, பாலையன் மகன் மணிகண்டன், 39, கூலித் தொழிலாளியான இவர், எஸ்.எஸ்.ஐ., மணிகண்டனிடம் வாக்குவாதம் செய்து, கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் புகார்படி, தொழிலாளி மணிகண்டன் மீது, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us