/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் சிறை தியாகிகள்ஜோதி நினைவு பயணம்
/
சேலம் சிறை தியாகிகள்ஜோதி நினைவு பயணம்
ADDED : ஏப் 01, 2025 01:42 AM
சேலம் சிறை தியாகிகள்ஜோதி நினைவு பயணம்
சேலம்:சேலம் மத்திய சிறையில், 1950ல், கம்யூனிஸ்டு கட்சியினர், 22 பேர் அன்றைய ஆட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவாக மதுரையில், மா.கம்யூ., அகில இந்திய, 24வது மாநாடு, நாளை (2ல்) தொடங்கி, 6ம் தேதி வரை நடக்கிறது.
மாநாட்டையொட்டி, திடலை நோக்கி நினைவு சுடர் பயணம், சேலம் மத்திய சிறை சாலையில் தொடங்கியது. வடக்கு மாவட்ட செயலர் பிரவீன்குமார் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம் செங்கொடியை ஏற்றினார். சி.ஐ.டி.யு., தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலு ஜோதி சுடரை எடுத்து கொடுக்க, முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு தலைமையில் எடுத்து செல்லப்பட்டது.
கந்தம்பட்டி, தாதகாப்பட்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நினைவு ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில உறுப்பினர்கள் குமார், ராணி உள்பட பலர் உடனிருந்தனர்.

