/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தண்ணீர் கேட்பதுபோல் நடித்துபெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு
/
தண்ணீர் கேட்பதுபோல் நடித்துபெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு
தண்ணீர் கேட்பதுபோல் நடித்துபெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு
தண்ணீர் கேட்பதுபோல் நடித்துபெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு
ADDED : ஏப் 04, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்ணீர் கேட்பதுபோல் நடித்துபெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு
காரிப்பட்டி:காரிப்பட்டி அடுத்த கருமாபுரம் அருகே வெள்ளைக்குட்டை தெருவை சேர்ந்த விவசாயி பழனிவேல். இவரது மனைவி கலைச்செல்வி, 49. இவர், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு வீடு முன் நின்றிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், தண்ணீர் கேட்டுள்ளார். கலைச்செல்வி வீட்டுக்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது அந்த மர்ம நபர், கலைச்செல்வி அணிந்திருந்த, 3 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினார். இதுகுறித்து கலைச்செல்வி புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

