ADDED : ஏப் 12, 2025 01:45 AM
அ நிறம் | அளவு
தேங்காய் பறிக்க முயன்றுதவறி விழுந்தவர் பலி
ஓமலுார்:சேலம், கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி, 52. கூலித்தொழிலாளியான இவர், செல்லப்பிள்ளைக்குட்டையில் நேற்று முன்தினம் மாலை, உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு தேங்காய் பறிக்க மரத்தில் ஏறியபோது தவறி விழுந்துள்ளார்.
அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
