sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போதை மாத்திரை விற்றஇரண்டு பேருக்கு 'காப்பு'

/

போதை மாத்திரை விற்றஇரண்டு பேருக்கு 'காப்பு'

போதை மாத்திரை விற்றஇரண்டு பேருக்கு 'காப்பு'

போதை மாத்திரை விற்றஇரண்டு பேருக்கு 'காப்பு'


ADDED : ஏப் 15, 2025 01:57 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதை மாத்திரை விற்றஇரண்டு பேருக்கு 'காப்பு'

பள்ளிப்பாளையம்:போதை மாத்திரை விற்பனை செய்த, இரண்டு பேரை கைது செய்த போலீசார், 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே, நாட்டாகவுண்டம்புதுார் பகுதியில் உள்ள ஆற்று படித்துறை அருகே, போதை மாத்திரை விற்பனை நடந்து வருகிறது. போதை மாத்திரை வாங்க எந்நேரமும் இளைஞர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இளைஞர்களை குறிவைத்தே இந்த போதை மாத்திரை விற்பனை நடந்து வருகிறது. நேற்று காலை முதலே, பள்ளிப்பாளையம் போலீசார் நாட்டாகவுண்டம்புதுார் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இரண்டு பேர் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கோட்டக்காடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜீவானந்தம், 24, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ராகுல், 21, என, தெரியவந்தது.

மேலும் ஒரு மாத்திரையை, 50 ரூபாய்க்கு வாங்கி, 300 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. போதை மாத்திரை விற்பனை செய்த, இரண்டு பேரையும், நேற்று மாலை பள்ளிப்

பாளையம் போலீசார் கைது செய்து, 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us