/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத 2 பேர் கைது
/
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத 2 பேர் கைது
ADDED : ஜன 19, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,: சேலம், அம்மாபேட்டை, பெரியார் நகரை சேர்ந்தவர் அழகேசன், 40. திருட்டு வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்தார். ஆனால், 5 மாதங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். அவரை பிடிக்க, நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதனால் நேற்று, அம்மாபேட்டை போலீசார், அவரை கைது செய்தனர்.
அதேபோல் சேலம், அழகாபுரம், ஸ்வர்ணபுரியை சேர்ந்தவர் பிலால், 36. கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்த இவரும், இரு மாதங்களாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.
இவரையும் அழகாபுரம் போலீசார், நேற்று கைது செய்தனர்.

