sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4 வயது குழந்தை கிணற்றில் வீசி கொலை கள்ளக்காதலுக்கு இடையூறால் தாய் வெறிச்செயல்

/

4 வயது குழந்தை கிணற்றில் வீசி கொலை கள்ளக்காதலுக்கு இடையூறால் தாய் வெறிச்செயல்

4 வயது குழந்தை கிணற்றில் வீசி கொலை கள்ளக்காதலுக்கு இடையூறால் தாய் வெறிச்செயல்

4 வயது குழந்தை கிணற்றில் வீசி கொலை கள்ளக்காதலுக்கு இடையூறால் தாய் வெறிச்செயல்


ADDED : செப் 02, 2024 02:20 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் உள்பட இருவரை, பரமத்தி வேலுார் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தை சேர்ந்-தவர் முத்தையன், 22; கூலி தொழிலாளி. இவரது மனைவி அதே பகுதியை சேர்ந்த சினேகா, 20; தம்பதியரின் மகள் பூவரசி, 4; சினேகாவுக்கும், அதே பகுதியை

சேர்ந்த சரத்குமார், 21, என்பவ-ருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதுதொடர்பாக நாமக்கல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் பேச்சு-வார்த்தை நடந்தது. அதில் 'இனிமேல் கணவனுடன் வசிக்-கிறேன்' என்று

சினேகா தெரிவித்துள்ளார்.பின், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கணவனுக்கு தெரி-யாமல் குழந்தையுடன் மாயமான சினேகா, ப.வேலுார் அருகே சேலுார், செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த உறவினரான கோகிலா, 40, வீட்டுக்கு சென்றார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் குழந்தையை கொலை செய்ய இருவரும் முடிவு செய்தனர். நேற்று மதியம் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த குழந்-தையை அப்பகுதியில் உள்ள கிணற்றில் சினேகா வீசியுள்ளார். இதை

நேரில் பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்து ப.வேலுார் போலீ-சாருக்கு தகவல் தெரிவித்தனர்.நாமக்கல் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., முருகேசன், ப.வேலுார் எஸ்.ஐ., குமார் விரைந்து சென்றனர். விசாரணையில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றதை சினேகா, ஆலோசனை கூறியதாக உறவினர் பெண் கோகிலா

ஒப்புக்கொள்ளவே, ப.வேலுார் போலீசார் இருவரையும் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், பெற்ற குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us