sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமியை மணந்ததாக இரு புகார்கள் 5 பேர் மீது குழந்தை திருமண வழக்கு

/

சிறுமியை மணந்ததாக இரு புகார்கள் 5 பேர் மீது குழந்தை திருமண வழக்கு

சிறுமியை மணந்ததாக இரு புகார்கள் 5 பேர் மீது குழந்தை திருமண வழக்கு

சிறுமியை மணந்ததாக இரு புகார்கள் 5 பேர் மீது குழந்தை திருமண வழக்கு


ADDED : மார் 02, 2025 07:01 AM

Google News

ADDED : மார் 02, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சிறுமியை மணந்ததாக அளித்த இரு புகார்களில், 5 பேர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூரை சேர்ந்த மணி மகன் மணிகண்டன், 21. ரிக் வண்டி டிரைவரான இவர், பணி விஷயமாக இரு ஆண்டுக்கு முன் திருவண்ணாமலை சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி-யுடன் பழகி காதலித்த நிலையில், கடந்த ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமி, இரு நாட் களுக்கு முன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்தது.மருத்துவ அலுவலர் தகவல்படி ஆத்துார் மகளிர் போலீசார், நேற்று மணிகண்டன் மீது, போக்சோ, குழந்தை திருமண தடுப்பு சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர்.அதேபோல் தலைவாசல் அருகே வீரகனுார், ராயர் பாளையத்தை சேர்ந்த, முத்துசாமி மகன் முருகதாஸ், 24. இவருக்கு கடந்த பிப்., 10ல், துறையூரை சேர்ந்த, 17 வயது பெண்ணுடன் திருமணமானது.இதுகுறித்து குழந்தைகள் உதவி மையத்துக்கு அளித்த புகாரில், ஆத்துார் மகளிர் போலீசார் விசாரித்து, முருகதாஸ், அவரது பெற்றோர் முத்துசாமி, முத்து லட்சுமி, சிறுமியின் தாய் பரமேஸ்-வரி மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் நேற்று வழக்கு பதிந்தனர்.மேலும் சிறுமியை மீட்டு சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us