ADDED : ஆக 25, 2024 07:39 AM
சேலம்: வரும், 27ல், சேலம் உள்பட, 5 மாவட்டங்களில் பி.எப்., குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து சேலம் மண்டல பி.எப்., கமிஷனர் சந்தீப் சிங் நேகி அறிக்கை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து, மாவட்ட வாரி-யாக, ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர் கூட்டத்தை, 'நிதி ஆப்கே நிகட் 2.0' பெயரில் நடத்துகிறது.
அதன்படி ஆகஸ்ட் குறைதீர் கூட்டம், வரும், 27ல் 5 மாவட்டங்-களில் நடக்க உள்ளது. அதன்படி சேலத்தில் அத்வைத ஆசிரம சாலை, ஸ்ரீவிநாயகா வித்யாலயா மெட்ரிக் பள்ளி; ஈரோட்டில் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி., மருத்துவ கல்லுாரி; தர்மபுரியில் காந்தி நகர் செந்தில் பப்ளிக் பள்ளி; நாமக்கல்லில், திருச்சி பிர-தான சாலையில் உள்ள நளா ஓட்டல்; கிருஷ்ணகிரியில் பெரியார் நகர் சுவாமி விவேகானந்தர் மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. இதில் உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்-யவும், இ.பி.எப்., அட்வான்ஸ் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்-தப்பட உள்ளது. இதனால் பி.எப்., நிறுவனத்தின் வரம்புக்குட்-பட்ட பணியாளர், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், ஒப்பந்-ததாரர், குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

