/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருமணிமுத்தாற்றில் வெள்ளம் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலத்தால் அவதி
/
திருமணிமுத்தாற்றில் வெள்ளம் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலத்தால் அவதி
திருமணிமுத்தாற்றில் வெள்ளம் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலத்தால் அவதி
திருமணிமுத்தாற்றில் வெள்ளம் அடிக்கடி மூழ்கும் தரைப்பாலத்தால் அவதி
ADDED : ஆக 13, 2024 06:49 AM
வீரபாண்டி: மழை காலம் துவங்கியுள்ளதால், திருமணிமுத்தாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் அடிக்கடி மூழ்கி போக்குவ-ரத்து தடைபடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சேலம் மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பொழிந்தது. இதனால் திருமணிமுத்தாற்றில் இருகரைகளையும் தொட்டபடி, மழைநீர் கலந்த கழிவுநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடியது. ஆட்டையாம்பட்டி அருகே, இனாம் பைரோஜி புதுப்பாளையத்தில், சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லை திருமணிமுத்தாற்றில் குறு க்கே தரைப்பாலம் உள்ளது.
இவ்வழியை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். ஆற்றில் ஏற்-பட்டுள்ள வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கி, இரண்டாடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடியது. பாலத்தை பாதசாரிகள், வாக-னங்கள் கடக்க முடியாமல், ஐந்து கி.மீ., சுற்றிக்கொண்டு ஆட்-டையாம்பட்டி வழியாக சென்றனர். பழைய தரைப்பாலத்தை இடித்து விட்டு, புதிக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என, இரு மாவட்ட மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

