நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய் திருடிய பெண்
சேலம், அக். 25-
சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள, தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோரில், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, 3 பெண்கள் உள்பட, 4 பேர் வந்தனர். அவர்கள் 12,250 ரூபாய் மதிப்பில், 10 லிட்டர் நெய், 9 லிட்டர் எண்ணெயை திருடிச்சென்றதாக, கடை மேலாளர் ஜெகதீஷ், அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் நெய், ஆயில் திருடியது, மதுரை வடுகப்பட்டி, விகரமங்கலத்தை சேர்ந்த ஈஸ்வரி, 45, என தெரிந்து, அவரை கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடுகின்றனர்.

