நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 2-
சேலம், சீலநாயக்கன்பட்டி, வெடிப்புபாறை ஊத்துக்காட்டை சேர்ந்தவர் மகாலட்சுமி, 33. இவரது ஆடுகளை, கடந்த, 28 இரவு வீடு அருகே கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை வெள்ளாடு, செம்மறி ஆடு திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி அன்னதானப்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி'வில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மொபட் திருடன் கைது
சேலம், டிச. 2-
சேலம், களரம்பட்டி, நேதாஜி தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 20. இவர் நேற்று முன்தினம் வீடு முன் நிறுத்தியிருந்த, 'டியோ' மொபட் திருடுபோனது. இதுகுறித்து அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்து, புதிய சுண்ணாம்பு சூளை, ஒத்த முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், 19, என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும், 2 பேரை, போலீசார் தேடுகின்றனர்.