ADDED : பிப் 02, 2025 01:40 AM
அ நிறம் | அளவு
'கல்வி துறைக்கு போதாது'
வக்கீல் ஆர்.விஜயராசா: பாதுகாப்பு துறைக்கு, 4,91,732 கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டு, கல்வி துறைக்கு, 1,28,650 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது போதுமானதல்ல.
மருத்துவ படிப்புக்கு கூடுதல் இடங்கள் ஏற்படுத்தி இருப்பது, எதிர்காலத்தில் மலிவு விலையில் தரமான சிகிச்சை கிடைப்பதற்கு உறுதி. 50 சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதன் மூலம், அந்நிய முதலீடு அதிகரித்து நாட்டின் வருவாய்க்கு வழி கிடைக்கும்.
அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கும், 'பிராட்பேண்ட்' வசதி கிடைக்க செய்வது, கல்வித்தரத்தை மேம்படுத்தும்.
