ADDED : பிப் 12, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜவுளி கடைதொழிலாளி மாயம்
சேலம்:சேலம், மணியனுாரை சேர்ந்த சுரேஷின் மனைவி சலோனியா, 24. இவர்களுக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். சலோனியா, புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஜவுளி கடையில் பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் பணிக்கு சென்ற அவர், வீடு திரும்பவில்லை. சுரேஷ், கடைக்கு சென்று விசாரித்தபோது, வேலைக்கு வராதது தெரிந்தது. பின் எங்கு தேடியும் கிடைக்காததால், அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.