தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புளியம்பழம் பறிக்க ஏலம்

புளியம்பழம் பறிக்க ஏலம்

புளியம்பழம் பறிக்க ஏலம்


ADDED : பிப் 19, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புளியம்பழம் பறிக்க ஏலம்

வீரபாண்டி:வீரபாண்டி ஒன்றியத்தில், அரியானுார் - ஆட்டையாம்பட்டி பிரதான சாலையின் இருபுறமும், 100க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. அவற்றில் வீரபாண்டி ஊராட்சிக்கு சொந்தமான, 88 மரங்களில் வளர்ந்துள்ள புளியம் பழங்களை பறித்துக்கொள்ளும் உரிம ஏலம் கடந்த, 13ல் நடந்தது.

இதில், 51,072 ரூபாய்க்கு கோரிய கிருஷ்ணசாமிக்கு உரிமம் வழங்கப்பட்டது. அதேபோல் அக்கரபாளையம் ஊராட்சிக்கு சொந்தமாக, 34 மரங்கள் உள்ளன. அவற்றில் 27 மரங்களில் மட்டும் பழங்கள் உள்ளதால் அதன் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 25,901 ரூபாய்க்கு சாமியப்பன் என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டது. இனாம் பைரோஜி ஊராட்சிக்கு சொந்தமாக உள்ள மரங்களுக்கு, நாளை ஏலம் நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us