ADDED : பிப் 22, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரசாயனம் தெளித்தசெவ்வாழை அழிப்பு
தாரமங்கலம்:தாரமங்கலம் தினசரி மார்க்கெட் பகுதி கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியபிரபு உள்ளிட்டோர் நேற்று சோதனை
செய்தனர். அப்போது தாமரைச்செல்வன் கடையில் ரசாயனம் தெளித்த நிலையில், 8 கிலோ அளவில் செவ்வாழை பழம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த பழங்களை வெட்டி குப்பையில் வீசினர். தொடர்ந்து முத்திரை இடாத பெட்டியில் வைத்திருந்த ஸ்ட்ராபெரி பழங்கைளை விற்கக்கூடாது; கடை நடத்த உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தி,
அபராதம் விதித்தனர்.