ADDED : மார் 26, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
ஜலகண்டாபுரம்:பாதுகாப்பு கேட்டு, காதல் ஜோடி, ஜலகண்டாபுரம் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
ஜலகண்டாபுரம் அருகே, சூரப்பள்ளி குப்பம்பட்டியை சேர்ந்தவர் பொன்னர்சங்கர், 26. சேலம் லீபஜாரில் கூலிதொழிலாளியாக உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, 19, சேலம் அரசு கலைக் கல்லுாரியில் இரண்டாமாண்டு பி.காம். பயின்று வருகிறார். இருவரும் நேற்று காதல் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு, ஜலகண்டாபுரம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இருவரது வீட்டுக்கு தகவல் கொடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.