/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரம்ஜான் பண்டிகையால்ஆடு விலை அதிகரிப்பு
/
ரம்ஜான் பண்டிகையால்ஆடு விலை அதிகரிப்பு
ADDED : ஏப் 01, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரம்ஜான் பண்டிகையால்ஆடு விலை அதிகரிப்பு
வாழப்பாடி:பேளூர் வாரச்சந்தையில், 80 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்தது. வாழப்பாடி அடுத்த பேளூர் வாரச்சந்தையில், நேற்று ஆடுகள் விற்பனை நடந்தது. சேலம், வெள்ளிமலை, கருமந்துறை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு துவங்கிய சந்தைக்கு, 1,900 ஆடுகள் வரை விற்பனைக்கு வந்தது. 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு, 4,900 முதல், 7,000 ரூபாய் வரையும், பெண் ஆடு, 3,800 முதல் 5,400 ரூபாய் வரை விற்பனையானது.