/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டையால் அடித்துஅண்ணன் கொலை:தம்பிக்கு 'காப்பு'
/
கட்டையால் அடித்துஅண்ணன் கொலை:தம்பிக்கு 'காப்பு'
ADDED : ஏப் 05, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கட்டையால் அடித்துஅண்ணன் கொலை:தம்பிக்கு 'காப்பு'
இளம்பிள்ளை:இளம்பிள்ளை, கே.கே.நகர் மாரியம்மன் கோவில் அருகே வசித்தவர் சிவமூர்த்தி, 30. தறித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, மனைவி கவுசல்யா, இரு குழந்தைகள் உள்ளனர்.
சிவமூர்த்தியின் தம்பி கவுதமராஜ் என்ற சீசா, 25. இவர், கட்டட வேலை செய்து வருகிறார். சகோதரர்கள் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கவுதமராஜ், கட்டையால் தாக்கியதில் சிவமூர்த்தி சம்பவ இடத்தில் பலியானார். மகுடஞ்சாவடி போலீசார் கவுதமராஜை கைது செய்தனர்.

