/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுவாமி தாலி திருடியவர்கேமராவில் சிக்கினார்
/
சுவாமி தாலி திருடியவர்கேமராவில் சிக்கினார்
ADDED : ஏப் 06, 2025 01:24 AM
சுவாமி தாலி திருடியவர்கேமராவில் சிக்கினார்
பனமரத்துப்பட்டி:அம்மன் சுவாமி சிலையில் இருந்த தாலியை திருடிய வாலிபர், கேமராவில் சிக்கிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மல்லுார் அருகே பள்ளித்தெருப்பட்டி, புது மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 2, 3ல் நடந்தது. 2 அன்று உற்சவர் சிலைக்கு அலங்காரம் செய்து கருவறை வெளியே பக்தர்கள் வழிபட வைக்கப்பட்டிருந்தது. அடுத்த
நாள், உற்சவர் சிலைக்கு அணிவித்திருந்த, ஒரு பவுன் தங்க தாலியை காணவில்லை. கோவில் கேமரா பதிவு காட்சிகளை பார்த்தபோது, வெளியூரை சேர்ந்த ஒருவர், சுவாமி கும்பிடுவது போல் அம்மன் தாலியை திருடுவது தெரிந்தது. பின் அவர், சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவரை, மல்லுார் போலீசார் தேடுகின்றனர்.

