sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இயற்கை முறையில்குண்டுமல்லி பதியம்உற்பத்திக்கு விழிப்புணர்வு

/

இயற்கை முறையில்குண்டுமல்லி பதியம்உற்பத்திக்கு விழிப்புணர்வு

இயற்கை முறையில்குண்டுமல்லி பதியம்உற்பத்திக்கு விழிப்புணர்வு

இயற்கை முறையில்குண்டுமல்லி பதியம்உற்பத்திக்கு விழிப்புணர்வு


ADDED : ஏப் 20, 2025 02:00 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 200 ஏக்கரில் குண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது. இதனால் இயற்கை முறையில் குண்டுமல்லி செடி பதியம் உற்பத்தி செய்தல் மற்றும் மகசூல் பெருக்கம் குறித்து, நாமக்கல் தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள், விவசாயிகளுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது இயற்கை முறையில் உற்பத்தி பெருக்குதல் சுற்றுச்சுழல் மற்றும் நிலத்தின் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. செடியின் நீளமுள்ள பழைய தண்டுகளை தேர்வு செய்து, நன்கு வடிகால் அமைப்புள்ள மண் சேர்க்கையில் பதிய வைக்க வேண்டும். அதில் ஆக்சிஜன் பேஸ்ட், தேன், ஆலோவேரா சேர்க்க வேண்டும். இது, வேர் உற்பத்தியை ஊக்குவிக்கும். சீராக நீர் தெளித்தால், 15 - 20 நாட்களுக்கு வேர் வளரும். ஒரு மாதத்துக்கு பின் தனியே எடுத்து நடவு செய்யலாம் என, குண்டுமல்லி விவசாயிகளுக்கு நேரடி செயல்விளக்கம் அளித்து, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us