ADDED : ஜூலை 17, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், டெய்லர் தோட்டத்தில் பதுங்கியிருந்த, 6 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த சின்ன கோனுார் கிராமம், டெய்லர் ஆனந்தன், 50. இவர் நேற்று காலை, 9:00 மணிக்கு தனது வீட்டருகே உள்ள தோட்டத்துக்கு சென்றார்.
அப்போது, அங்கு மரத்தில் ஒரு சாரைபாம்பு பதுங்கி இருப்பதை கண்டு, மேட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பதுங்கி இருந்த, 6 அடி நீள சாரை பாம்பை உயிருடன் மீட்டு, மேட்டூர் சீத்தாமலையில் விட்டனர்.