/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தோட்டக்கலை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் நலச்சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவி தோட்டக்கலை அலுவலர் சங்க மநால தலைவர் முருகன் தலைமை வகித்தார்.
அதில் வேளாண் துறையில் செயல்படுத்தும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (யு.ஏ.டி.டி.,) - 2.0 என்பது உழவர்களை பாதிக்கும் என்பதால், அத்திட்டத்தை கைவிட வேண்டும்; தோட்டக்கலை துறை அலுவலர்களை, அவரச காலத்தில் இடமாற்றுவதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நலச்சங்க மாவட்ட தலைவர் அனுஷா, உதவி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

