ADDED : மார் 31, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
நங்கவள்ளி, பங்குனி உத்திர திருவிழாவில், நேற்று லட்சுமி நரசிம்மருக்கு திருக்கல்யாண உற்வசம் கோலாகலமாக நடைபெற்றது.
நங்கவள்ளியில், லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. கடந்த, 26ல் பங்குனி உத்திரம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்வாக ஐந்து நாள் நடைபெறும் தேரோட்டம், வரும் ஏப்.,2ல் துவங்குகிறது. 7ல் பாரிவேட்டை, சத்தாபரணம், 8ல், கொடியிறக்குதல், 9ல் ஏழு சுற்று உற்சவத்துடன் பங்குனி உத்திர தேரோட்டம் பண்டிகை நிறைவு
பெறுகிறது.
