/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளாஸ்டிக் பொருட்கள் 100 கிலோ பறிமுதல்
/
பிளாஸ்டிக் பொருட்கள் 100 கிலோ பறிமுதல்
ADDED : ஜன 29, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளாஸ்டிக் பொருட்கள் 100 கிலோ பறிமுதல்
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மேகநாதன்(பொ) தலைமையில் அலுவலர்கள், கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகளில் நேற்று சோதனை நடத்தினர்.
ஒரு மளிகை கடையில் இருந்த பிளாஸ்டிக் கப், தட்டு, பை உள்பட, 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடை
உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் அபராதம்
விதித்தனர்.

