ADDED : மார் 06, 2025 01:52 AM
அ நிறம் | அளவு
ரயில்களில் மயங்கிவிழுந்த 2 பேர் பலி
சேலம்:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கைலாசம்பாளையத்தை சேர்ந்தவர் மாதம்மாள், 60. இவர் நேற்று காலை பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில், இரு மகன்கள், பேரன்களுடன் சென்றுகொண்டிருந்தார். ரயில் சேலம் வந்தபோது மாதம்மாள் மயங்கி விழுந்தார். ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், மருத்துவர்களுடன் வந்தனர். பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரிந்தது.
அதேபோல், மேற்கு வங்கத்தில் இருந்து கட்டட வேலைக்கு, 9 பேர், திப்ரூகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுகொண்டிருந்தனர். காட்பாடி அருகே வந்தபோது, முஜிபூர் ரகுமான், 42, என்பவர் மயக்கம் அடைந்து இறந்தார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
