/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டயர் வெடித்து கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு
/
டயர் வெடித்து கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 25, 2024 07:03 AM
ஆத்துார்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறையில் இருந்து மர-வள்ளி கிழங்கு ஏற்றிக்கொண்டு, ஆத்துார், காட்டுக்கோட்டைக்கு மினி சரக்கு லாரி வந்துகொண்டிருந்தது. ஆனால் அளவுமீறி கிழங்கு ஏற்றியதால், நேற்று மதியம், 2:00 மணிக்கு ஆத்துார் புற-வழிச்சாலையில், தென்னங்குடிபாளையம் வந்தபோது லாரியின் பின்புற டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் வந்த, டிரைவர், 6 தொழிலாளர்கள், லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு வாகனம் மூலம் மினி லாரி அகற்றப்பட்ட பின் போக்குவரத்து சீரானது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

