/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்நடைகளுக்கு இலம்பி தோல் நோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
/
கால்நடைகளுக்கு இலம்பி தோல் நோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
கால்நடைகளுக்கு இலம்பி தோல் நோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
கால்நடைகளுக்கு இலம்பி தோல் நோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
ADDED : ஆக 19, 2024 06:07 AM
சேலம்: கால்நடைகளுக்கு இலம்பி தோல் நோய் தாக்-கத்தை தடுக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறி-வுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம் மாவட்டத்தில் கால்நடைகளில் பரவி வரும் இலம்பி தோல் நோய், வைரஸ் கிருமி-களால் ஏற்படும் அம்மை வகையை சேர்ந்தது. கொசு, ஈ, உண்ணிக்கடியால் பாதிக்கப்பட்ட மாட்-டிடமிருந்து பிற மாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்-ளது. பாதிக்கப்பட்ட கால்நடைகள் கண்ணிலி-ருந்து நீர் வடிதல், சளி, கடும் காய்ச்சல், மாடுகள் சோர்வாகவும், உடல் முழுதும் சிறு சிறு கட்டிக-ளாகவும் புண்கள் காணப்படும். நிணநீர் சுரப்பி பெரிதாக காணப்படும்.
பாதிக்கப்பட்ட மாடுகளை தனிமைப்படுத்தி பரா-மரித்தல், கொட்டகையை சுத்தமாக பராமரித்தல், மாடுகளை பராமரிப்போர் அடிக்கடி கிருமிநாசி-னியால் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட-வற்றால் கட்டுப்படுத்தலாம். இந்நோய் தாக்கத்த-லிருந்து காக்க, கால்நடை மருந்தகங்களில் உதவி மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம்.

