/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழிக்குப்பழி கொலை 4 பேருக்கு 'குண்டாஸ்'
/
பழிக்குப்பழி கொலை 4 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : டிச 07, 2024 07:36 AM
சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே காட்டூரை சேர்ந்த ரவுடி ஆனந்தன், 44. இவர் கடந்த ஆண்டு பிப்., 5ல் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட, சுக்-கம்பட்டியை சேர்ந்த சரவணனை, கடந்த நவ., 8ல், ஒரு கும்பல் கொலை செய்தது. இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசார-ணையில், பழிக்குப்பழியாக கொலை நடந்தது
தெரிந்தது. தொடர்ந்து, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில், ஓமலுார் அருகே காமலாபுரத்தை சேர்ந்த
பன்னீர்செல்வம், 27, சேலம், பொன்னம்மாபேட்டை ஜீவா, 23, கருப்பூர் அருகே குள்ள-கவுண்டனுார் சாரதி, 20, சூரியா, 23,
ஆகியோரை, குண்டர் சட்-டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.