sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடியிருப்புக்கு நடுவே உபரிநீர் கால்வாய் அமைக்க கடும் எதிர்ப்பு

/

குடியிருப்புக்கு நடுவே உபரிநீர் கால்வாய் அமைக்க கடும் எதிர்ப்பு

குடியிருப்புக்கு நடுவே உபரிநீர் கால்வாய் அமைக்க கடும் எதிர்ப்பு

குடியிருப்புக்கு நடுவே உபரிநீர் கால்வாய் அமைக்க கடும் எதிர்ப்பு


ADDED : ஆக 20, 2024 03:15 AM

Google News

ADDED : ஆக 20, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தாரமங்கலம் நகராட்சி, எட்டாவது வார்டு சரஸ்வதி நகர் மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தாரமங்கலம், பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அதன் ராஜ வாய்க்கால் வழியாக, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள பவளத்தானுார் ஏரியை சென்றடையும். எட்டு மீட்டர் அகலம் கொண்ட ராஜ வாய்க்காலை முழுமையாக ஆக்கிரமித்து அடுக்குமாடி, கடைகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுவிட்டன. அதனால், மழை காலங்களில் ராஜவாய்க்காலை சென்றடையும் தண்ணீர், அப்பகுதி குடியிருப்புகளை சூழ்ந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சரபங்கா வடிநிலத்தில் வறண்ட, 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தில், தாரமங்கலம் பெரியேரியில் இருந்து, பவளத்தானுார் ஏரிக்கு உபரிநீர் கொண்டு செல்ல, 60 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புக்கு மத்தியில், அதாவது பட்டா நிலத்தில் கால்வாய் வெட்ட மேற்கொண்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தி விட்டோம். எனினும் அதிகாரிகள் மீண்டும், அதே இடத்தில் கால்வாய் வெட்ட முயற்சிக்கின்றனர். எனவே, குடியிருப்புக்கு நடுவே உபரிநீர் கால்வாய் வெட்டுவதை கைவிட வேண்டும். ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி, அதன்வழியே உபரிநீர் கொண்டு செல்ல நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us