/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் மாணவிகளுக்கான மல்யுத்தம்; 100 பேர் பங்கேற்பு
/
சேலத்தில் மாணவிகளுக்கான மல்யுத்தம்; 100 பேர் பங்கேற்பு
சேலத்தில் மாணவிகளுக்கான மல்யுத்தம்; 100 பேர் பங்கேற்பு
சேலத்தில் மாணவிகளுக்கான மல்யுத்தம்; 100 பேர் பங்கேற்பு
ADDED : செப் 10, 2024 07:04 AM
சேலம்: சேலத்தில், கல்லுாரி மாணவிகளுக்கான மல்யுத்த போட்டியில், 100 பேர் பங்கேற்றனர்.சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலை கல்லுாரியில், நேற்று பெரியார் பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையேயான, மகளிர் மல்யுத்த போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் காந்திமதி தொடங்கி வைத்தார்.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள, 20 கல்லுாரிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, 50 முதல், 76 கிலோ வரை எடை அடிப்படையில், 10 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடித்த மாணவிகளுக்கு, பாராட்டு சான்றித-ழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகள் டிசம்பரில் நடக்கும், அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு
இடையேயான மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.இந்நிக-ழ்ச்சியில், பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்-குனர் வெங்கடாசலம், மகளிர் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.