ADDED : மார் 12, 2024 04:24 AM
அ நிறம் | அளவு
சேலம்: டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நேற்று சேலத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
