ADDED : ஜன 24, 2025 01:33 AM
அ நிறம் | அளவு
பெண் மாயம்
சேலம், : வாழப்பாடி அருகே கோலாத்துக்கோம்பையை சேர்ந்தவர் அருள்குமார், 26.
இவரது மனைவி மஞ்சுளா, 20. இவர்கள் கடந்த, 14ல், அஸ்தம்பட்டியில் உள்ள மஞ்சுளாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். 21 அதிகாலை, மஞ்சுளாவை காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை தேவராஜ், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
