ADDED : மார் 15, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
களைகட்டிய எருதாட்டம்
இடைப்பாடி:இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 25ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று மாலை கோவிலை சுற்றி, 7 காளைகளுடன் எருதாட்டம் நடந்தது. ஏராளமான இளைஞர்கள், மாடுகளை பிடித்தபடி ஓடினர். ஏராளமானோர் கண்டுகளித்தனர். பின் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது.