ADDED : மார் 18, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தையிடம் நகை திருட்டு
ஆட்டையாம்பட்டி:ஆட்டையாம்பட்டி, மருளையாம்பாளையம், முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோகிலபிரியா, 24. இவர், 4 வயது பெண் குழந்தையுடன், கடந்த, 9ல் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு மாரியம்மன் கோவில் திடலில் குழந்தை விளையாடிவிட்டு திரும்பியபோது, அவர் அணிந்திருந்த, 2 பவுன் நகையை காணவில்லை. குழந்தையிடம் கேட்டபோது, ஒரு சிறுமி கழற்றிச்சென்றதாக தெரிவித்தார். இதுகுறித்து கோகிலபிரியா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

