/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருநங்கையை தாக்கியவாலிபருக்கு 'காப்பு'
/
திருநங்கையை தாக்கியவாலிபருக்கு 'காப்பு'
ADDED : மார் 30, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநங்கையை தாக்கியவாலிபருக்கு 'காப்பு'
சேலம்:சேலம், கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனி, புது சுண்ணாம்பு சூளையை சேர்ந்தவர் ராம்குமார், 26. கடந்த, 4 ஆண்டுக்கு முன் ஸ்ரேயா, 30, என்ற திருநங்கையை திருமணம் செய்து கொண்டார். ஓராண்டுக்கு முன் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி, தனியே வசிக்கின்றனர். கடந்த, 27ல் அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் இருவரும் சந்தித்தபோது தகராறு ஏற்பட்டது. அதில் ராம்குமார், பீர் பாட்டிலால் தாக்கியதில் ஸ்ரேயா படுகாயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார், ராம்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.