ADDED : ஏப் 01, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்டோ கவிழ்ந்துமுதியவர் பலி
சேலம்:வீராணம் அருகே வலசையூரை சேர்ந்தவர் அருணாச்சலம், 64. வீராணத்தில் இருந்து, நேற்று முன்தினம் ஆட்டோவில் சென்றார். அப்போது, வீராணம் அருகே ஒரு பள்ளி அருகில், ஆட்டோ சென்ற போது நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அருணாசலம் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக இவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அருணாசலத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

