ADDED : ஏப் 01, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநர் தின விழாகொண்டாட்டம்
ப.வேலுார்:-திருநங்கைகள் சார்பில், அகில உலக திருநங்கைகள் மற்றும் திருநர் தின விழா கொண்டாட்டம், பரமத்தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. இதில், திருச்சிலுவை கன்னியர் திருச்சி மாகாண தலைவி லுார்து அடைக்கலசாமி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட திருநங்கைகளின் தலைவி அருணா நாயக், தொண்டு நிறுவனர் அல்போன்ஸ் ராஜ், சாக்சீடு தொண்டு நிறுவன இயக்குனர் பரிமளா சேவியர் உட்பட, 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், திருநங்கைகளுக்கான அரசு சலுகைகள் மற்றும் தங்களின் வாழ்வாதாரம் குறித்து பேசினர்.