ADDED : ஏப் 12, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீடியோவால்மது விற்றவர் சிக்கினார்
பெ.நா.பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் அலுவலகம் அருகே, சட்ட விரோதமாக மது விற்பது குறித்து, சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வீடியோ பரவியது.
இதையடுத்து ஆத்துார் மதுவிலக்கு போலீசார் விசாரித்ததில், பெத்தநாயக்கன்பாளையம், காந்தி நகரை சேர்ந்த முருகன், 51, மது விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து, 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

