ADDED : ஏப் 12, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபட் திருடியவருக்கு 'காப்பு'
சேலம்:சேலம், குகையை சேர்ந்தவர் கவுரிசங்கர், 35. கடந்த, 8 இரவு, வீடு முன், 'டியோ' மொபட்டை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, மொபட்டை காணவில்லை. அவர் புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்ததில், கன்னங்குறிச்சி, சின்ன கொல்லப்பட்டி, காந்தி தெருவை சேர்ந்த ஹரி விக்னேஷ், 26, என்பவர் திருடியது தெரிந்தது.
அவரை, நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், மொபட்டை மீட்டனர்.