/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு
/
வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 10, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேனில் மணல் கடத்தல்10 பேர் மீது வழக்கு
கெங்கவல்லி:கெங்கவல்லி போலீசார், கடந்த, 6ல், தெடாவூர் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வேனை நிறுத்தாமல், போலீஸ் மீது மோதுவது போன்று சென்றனர். பதிவு எண் இல்லாத அந்த வேனை பின் தொடர்ந்து போலீசார் சென்றனர்.
இதனால் வேனை நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் உள்ளிட்டோர் தப்பி ஓடிவிட்டனர். வாகனத்தை சோதனை செய்தபோது, சுவேத நதியில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. வேனை
பறிமுதல் செய்து விசாரித்த போலீசார், கெங்கவல்லியை சேர்ந்த, 10 பேர் மீது நேற்று வழக்குப் பதிந்து, அவர்களை தேடுகின்றனர்.

