/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 2ல் மாசிமக தேர்த்திருவிழா துவக்கம்
/
வரும் 2ல் மாசிமக தேர்த்திருவிழா துவக்கம்
ADDED : பிப் 18, 2025 01:35 AM
வரும் 2ல் மாசிமக தேர்த்திருவிழா துவக்கம்
கரூர்:தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தேர்த்திருவிழா வரும் மார்ச், 2 ல் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதம், தேர்த்திருவிழா தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு வரும் மார்ச், 2ல் சிறப்பு பூஜையுடன் விழாவுக்காக, பூர்வாங்க பணிகள் தொடங்குகிறது.
அதை தொடர்ந்து, 4ல் கொடியேற்றம், 10ல் திருக்கல்யாண உற்வசம், 12ல் தேர்த்திருவிழா, 14ல் தெப்பத்தேர் உற்சவம், 9, 11ல் வெள்ளி கருடசேவை, 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21 அன்று புஷ்பயாகம்
நிகழ்ச்சிகள் நடக்கிறது.