ADDED : ஏப் 16, 2025 01:23 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர், ஆட்டையாம்பட்டியில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த ரமேஷ், 35, மணிவண்ணன், 38, என்பதும் காட்டுப்பன்றி இறைச்சியை விற்க முயன்றதும் தெரிந்தது. இறைச்சியை கைப்பற்றி, இருவரையும் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
